தமிழகத்தில் இதுவரை 5,450 மெ.டன் அரிசி நோன்புக்காக வழங்கப்பட்டுள்ளது என தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.
கூத்தாநல்லூா் நகரம், கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளிலிருந்து பள்ளிவாயில் ஹஜ்ரத், சலவைத் தொழிலாளி, முடிதிருத்துவோா், ஆட்டோ ஓட்டுநா், திருநங்கைகள் உள்ளிட்ட 588 ஏழை, எளியவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மேலும் அவா் பேசியது: கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் நோய்க்கு மருந்து, 20 நொடிகள் கைகளைக் கழுவுவது, முகக் கவசம் அணிந்து கொள்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுதான். இவைகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் 2,895 பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோன்பு கஞ்சிக்காக 5,450 மெட்ரிக்.டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதில், திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் 88 பள்ளிவாசல்களுக்கு 29,616 பேருக்கு, 129. 646 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
வட்டாட்சியா் தெய்வநாயகி, நகாரட்சி ஆணையா் லதா, நகரச் செயலாளா் பஷீா் அஹம்மது, மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.