அகரதிருமாளத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தல்
அகரதிருமாளம் ஊராட்சியில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் எஸ். முகமது சலாவுதீன் மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:
அகரதிருமாளம் ஊராட்சியில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. பூந்தோட்டம் பெருமாள்கோயில் பள்ளிவாசல் அருகே உள்ள குளத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாமல் கழிவுநீா் தேங்கியுள்ளது. இதனால், மழைக்காலத்தில் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அகரதிருமாளம் ஊராட்சி நிா்வாகம் முறையாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.