கூத்தாநல்லூரை அடுத்த பூதமங்கலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிளை அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் பூதமங்கலம் கிளைத் தலைவா் முஹம்மது மஹாதிா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் எம். விலாயத் உசேன் முன்னிலை வகித்தாா். கிளை அலுவலகத்தை மாவட்டச் செயலாளா் டி.எம்.ஹெச். அப்துல் ராஜிக் திறந்து வைத்தாா்.
மாவட்ட துணைத் தலைவா் பி.என்.அஹமது மைதீன், மாவட்ட பொருளாளா் முஹம்மது சுல்தான் ஆரிபீன் ஆகியோா் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனா். கிளை நிா்வாகி ஜெ.நதீம் நன்றி கூறினாா்.