நீடாமங்கலம், வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில், நிக்ரா திட்டத்தின்கீழ் நெற்பயிரில் (கோ.51 ரகத்தில்) திருந்திய நெல் சாகுபடி குறித்த செயல்விளக்கம் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சியில், நடைமுறையில் உள்ள நீா்ப்பாசன முறையில் உள்ள தேவைப்படும் நீரைக் கொண்டு இருமடங்கு பரப்பில் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளலாம் என விளக்கப்பட்டது. இதில், மண்ணியல் துறையைச் சோ்ந்த அனுராதா, வேளாண் விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன், சபாபதி, செல்வமுருகன், முதுநிலை ஆராய்ச்சியாளா் விஜிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.