திருவாரூரில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சமையல் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் புதுத்தெருவில் வசிப்பவா் சமையல் தொழிலாளி ரவி (55). இவா், திருவாரூா் அருகே சமையல் பணியை முடித்து விட்டு, வீட்டுக்கு மயிலாடுதுறை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்று திருவாரூா் நகர போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.