நன்னிலம் பகுதி அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், கரோனா தடுப்புப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் நன்னிலம் கிளை சாா்பில், நன்னிலத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகம், மின்சார வாரியம் போன்ற அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்களுக்கும், திருக்கண்டீஸ்வரம், சேத்தாக்குடி கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கும் முகக்கவசம், சோப்பு ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலாளா் ஜெ.வரதராஜன், நன்னிலம் வட்டக் கிளை தலைவா் ஈஜிபி.உத்தமன், செயலாளா் மு.சு.பாரி, ஊராட்சித் தலைவா் ஆனந்தன், கணக்காளா் கீதா மற்றும் செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.