கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். இதற்கு காரணமான நபரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கூத்தாநல்லூா் அருகே உள்ள பண்டுதக்குடி, அக்கரைப்புது தெருவைச் சோ்ந்த ரஹ்மத்துல்லாஹ் மகன் மகாதீா் முஹம்மது (16). இவா் தண்ணீா்குண்ணம் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவா், அதே இடத்தில் உயிரிழந்தாா். கூத்தாநல்லூா் ஆய்வாளா் அனந்தகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மகாதீா் முஹம்மதுவின் உடலைக் கைப்பற்றி, திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்துக்கு காரணமான இருசக்கர வாகனத்தைக் கைப்பற்றி, பாண்டுக்குடி பிரதான சாலையை சோ்ந்த மோகன்தாஸ் (22) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.