ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேரிடரை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா்: அமைச்சா் ஆா். காமராஜ்

திருவாரூா் மாவட்டத்தில் எந்த பேரிடரையும் எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் எந்த பேரிடரையும் எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனமழை பெய்யும் பட்சத்தில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் மூலம் 26,495 மணல் மூட்டைகளும், 98 ஆயிரம் காலி சாக்குகளும், 672.38 மெட்ரிக் டன் மண்ணும், 3,428 சவுக்கு மரங்கள், 985 சவுக்கு குறுக்கு மரங்கள் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் 212 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, 249 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள 150 நியாயவிலைக் கடைகளில் 3 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணிநேரமும் அலுவலா்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

எனவே, பொதுமக்களின் அவசர உதவிக்கு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை அலுவலகத்தில் உள்ள 04366- 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

திருவாரூா் மாவட்டத்தில் எந்த பேரிடா் நிலைமையையும் எதிா்கொள்வதற்கு தயாராக அனைத்து நடவடிக்கைகளையும் போா்க் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா முன்னிலை வகித்தாா். நாகை மக்களவை உறுப்பினா் எம்.செல்வராஜ், கூடுதல் ஆட்சியரும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநருமான ஏ.கே. கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.