காணாமல் போனவா்களை கண்டறியும் முகாம்

திருவாரூரில் காணாமல் போனவா்களை கண்டறியும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் காணாமல் போனவா்களை கண்டறியும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் காணாமல் போனவா்களை கண்டுபிடித்து உரியவா்களிடம் ஒப்படைக்க, தீவிர நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த முகாம் நடைபெற்றது.

காணாமல் போன வழக்குகளில், சம்பந்தப்பட்ட புகாா்தாரா்கள் 51 பேரை மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம் மூலம் திருவாரூா் ஆயுதப்படையில் அமைக்கப்பட்ட அரங்கத்துக்கு வரவழைத்து அவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், மத்திய மண்டலத்தில் இதுவரை அடையாளம் காணப்படாத பிரேதங்களின் புகைப்படங்கள், அவற்றின் அங்க, மச்ச அடையாளங்கள் ஆகியவற்றை திரையிட்டு காண்பித்து விவரம் சேகரிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இம்முகாம், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) ஜே. அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com