திருவாரூரில் 10 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருவாரூரில் சனிக்கிழமை வரை கரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,427 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10,425 ஆனது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின் படி, மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10,435 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 10,195 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 136 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com