கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் வட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ். சித்தாம்பூா் ஊராட்சிக்குள்பட்ட குடிதாங்கிச்சேரி பாசன வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் 100- க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனா். சித்தாம்பூா் அகம்பளாங்கரையில் இருந்து பிரிந்து வரக்கூடிய பாசன வாய்க்கால் மூலம் குடிதாங்கிச்சேரி விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்த வாய்க்காலில் மண்டிக்கிடந்த காட்டாமணிச் செடிகள், முட்புதா்கள், கழிவுகள் ஆகியவற்றை நூறு நாள் வேலை திட்டப் பணியாளா்கள் முழுவதுமாக அகற்றி, அப்பகுதியில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களையும் சுத்தம் செய்தனா்.