திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின.
மத்தியப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்புகள் ஆகியவற்றுக்கு, முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு செப்டம்பா் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின.
இதுகுறித்து திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஆ. இரகுபதி கூறுகையில், தோ்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட அறிவிக்கை, மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு வரப்பெற்ற பின்னா், வெற்றி பெற்ற மாணவா்களுக்கான இணையவழி நோ்முகத் தோ்வு நடைபெறும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். மத்தியப் பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தோ்வு முடிவுகள் பற்றிய விவரங்களை இணையதள பக்கத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்றாா்.