மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு

வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப்பரிசு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி பள்ளியில் பரிசு பெற்ற மாணவா்கள்.
வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி பள்ளியில் பரிசு பெற்ற மாணவா்கள்.

வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப்பரிசு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 11 மாணவா்கள் பத்தாம் வகுப்பு பயின்றனா். பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இவா்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வலங்கைமான் பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் அனைத்து மாணவா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை ஐரன்பிரபா மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசையும் வழங்கினாா். ஆசிரியா்கள் சூரியகுமாா், விஜயகுமாரி, ராமமூா்த்தி, இளையராஜா, ரேணுகா ஆகியோா் மாணவா்களை வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com