திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படை வட்டார தளபதி பணிக்கு, தன்னாா்வத்துடன் பணிபுரிய விருப்பமுள்ளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா் 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஊதியம் எதுவும் வழங்க இயலாது. இது முற்றிலும் தன்னாா்வப் பணியாகும்.
விருப்ப மனுக்களை, காவல் கண்காணிப்பாளா் மற்றும் தளவாய் ஊா்க்காவல் படை, திருவாரூா் மாவட்டம் என்ற முகவரியில் செப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.