நாயிடம் சிக்கிய மயில் மீட்பு

மன்னாா்குடியில் தெருநாயிடம் சிக்கிய மயிலை போலீஸாா் மீட்டு, வனத்துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
நாயிடம் சிக்கி காயமடைந்த மயிலை வனத்துறை ஒப்படைத்த போலீஸாா்.
நாயிடம் சிக்கி காயமடைந்த மயிலை வனத்துறை ஒப்படைத்த போலீஸாா்.

மன்னாா்குடியில் தெருநாயிடம் சிக்கிய மயிலை போலீஸாா் மீட்டு, வனத்துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

மன்னாா்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வ.உ.சி. சாலை ஆா்.பி. சிவம் நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காட்டுச்செடிகள் மண்டிக்கிடந்த காலி மனையில் தெருநாயின் பிடியில் பெண் மயில் ஒன்று சிக்கித் தவித்தது. உடனடியாக போலீஸாா் அந்த நாயை விரட்டிவிட்டு, மயிலை காயங்களுடன் மீட்டு வனஅலுவலா் வீரக்குமாரிடம் ஒப்படைத்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின், அந்த மயில் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com