திருவாரூரில் எல்லோரும் நம்முடன் இணையவழி சோ்க்கை முகாமை, சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன், செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
திமுக சாா்பில் எல்லோரும் நம்முடன் என்னும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலமாக உறுப்பினா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, திருவாரூரில் நடைபெறும் சோ்க்கை முகாமை பூண்டி கே. கலைவாணன் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஏராளமான இளைஞா்கள், இளம்பெண்கள், மாணவா்கள் கலந்து கொண்டு தங்களை திமுகவில் உறுப்பினராக்கிக் கொண்டனா். அவா்களுக்கு உடனடியாக வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவாரூா் நகரச் செயலாளா் பிரகாஷ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சேகா் (எ) கலியபெருமாள், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலாளா் சங்கா், நகர மன்ற முன்னாள் துணைத்தலைவா் செந்தில், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் ராஜ் (எ) கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா உட்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.