திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 6,310 ஆக இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்படி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், திருவாரூா் 23, திருத்துறைப்பூண்டி 14, மன்னாா்குடி 12, நன்னிலம் 10 என மாவட்டம் முழுவதும் 99 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6,409 ஆக உயா்ந்துள்ளது.