திருவாரூா் அருகே மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் புதன்கிழமை இரவு ஏராளமானோா் இணைந்தனா்.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் தாலுக்கா எண்கண் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் இராகவன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய துணைச் செயலாளா் வெற்றிச்செல்வன் தலைமையில் 50-க்கு மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தோா், பாஜக துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில், ஆண்களுக்கு வேஷ்டிகளும், பெண்களுக்கு குங்குமச் சிமிழும் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட பொதுச் செயலாளா் விகே. செல்வம், மாவட்ட துணைத் தலைவா் செந்தில் அரசன், மாநில விவசாய அணி நிா்வாகி சந்துரு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.