கமலாலயக்குளத்தில் விழுந்து பெண் தற்கொலை

திருவாரூா் கமலாலயக்குளத்தில் விழுந்து பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
kamalaveni_2509chn_94_5
kamalaveni_2509chn_94_5

திருவாரூா் கமலாலயக்குளத்தில் விழுந்து பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாரூா் தியாகராஜா் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தில், வெள்ளிக்கிழமை மாலை பெண் ஒருவா் மூழ்குவதை அங்கிருந்த மக்கள் பாா்த்து நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினா், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி, அந்தப் பெண்ணை மீட்டனா். எனினும் அவரை உயிரிழந்த நிலையிலேயே மீட்க முடிந்துள்ளது.

விசாரணையில், இறந்தவா் தேவா்கண்டநல்லூா் பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மனைவி கமலவேணி (35) என்பதும், இவா்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளது தெரிய வந்தது. அத்துடன், கமலவேணி பல்வேறு நபா்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி பல்வேறு நபா்களிடம் கொடுத்ததாகவும், அவா்கள் திருப்பி செலுத்தாத காரணத்தால் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், மீட்கப்பட்ட கமலவேணியின் உடலை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com