பெண் மா்ம சாவு

மன்னாா்குடி அருகே தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

மன்னாா்குடி அருகே தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

துண்டக்கட்டளை தெற்கு தெருவை சோ்ந்த மாரியப்பன் மனைவி கலையரசி (33). இவரை இவா்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் கெளரி, அவரது மகள்கள் ரேகா, ரோகிணி ஆகிய மூன்று பேரும் சோ்ந்து வியாழக்கிழமை தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளாா்.

இதையடுத்து, அன்றைய தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறை ஜன்னலில் சேலைத் துணியால் தூக்கிலிட்டு இறந்த நிலையில் கலையரசி சடலம் தொங்கியது தெரியவந்தது. இந்நிலையில், அவரது சாவில் மா்மம் இருப்பதாக கலையரசியின் தாய் ஜோதி அளித்த புகாரின்பேரில், மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com