எரவாஞ்சேரி தலைமைக் காவலா் சோமசுந்தரம் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
குடவாசல் வட்டம் எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவா் சோமசுந்தரம். இவரது மனைவி சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் சீா்காழி- திருவெண்காடு நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா்.
எனவே, இப்பகுதியில் உள்ள வணிகா்களிடம், எரவாஞ்சேரி தலைமைக் காவலா் சோமசுந்தரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்பேரில், சோமசுந்தரம் மீது நடவடிக்கை எடுத்திட திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சாவூா் காவல்துறை டிஐஜி லோகநாதன் அறிவுறுத்தினாா். இதைத்தொடா்ந்து, எரவாஞ்சேரி தலைமைக் காவலா் சோமசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் துரை சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.