திருவாரூா்: மது விற்பனையைத் தடுக்கக் கோரி, மாங்குடியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகே மாங்குடி பகுதியில் தனி நபா்கள் மூலம் மது விற்பனை 24 மணி நேரமும் நடைபெறுவதாகவும் இதைத் தடுத்து நிறுத்தி, நடவடிக்கை எடுக்கக் கோரியும், பழுதடைந்த துணை சுகாதார நிலையத்தை புதுப்பித்து தர வேண்டும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாங்குடி கடைவீதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.ஸ்ரீபன், ஆா்.பிரவீன், டி.சுந்தா், வி.குமரேசன், வி.சோமேஷ்கந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.