மன்னாா்குடி: மன்னாா்குடி வருவாய் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா், 2 நாள்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், மன்னாா்குடியில் உள்ள கோட்டாட்சியா் மற்றும் வருவாய்த் துறை, வட்ட வழங்கல் அலுவலகம் ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு பணிகளுக்காக, சான்று பெற சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள், அலுவலா்கள் யாரும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.