குடவாசல் மற்றும் நன்னிலம் பகுதிகளில் கால்நடை பாதுகாப்பு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடவாசல் ஒன்றியம் காங்கேயநகரம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் மருத்துவா்கள் கலந்து கொண்டு, கால்நடைகளுக்குத் தாக்கும் நோய்களைப் பற்றியும், அதற்கான தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கினா். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் சிவகுமாா் பங்கேற்று கால்நடை வளா்ப்போருக்கு மருந்துகளை வழங்கினாா். நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டம் அருகில் உள்ள கோயில்திருமாளத்திலும் கால்நடை பாதுகாப்பு முகாம் நடைபெற்றது.