திருவாரூா் நகராட்சி அலுவலகத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரதம மந்திரி ஆத்மநிா்பா நிதி திட்டத்தின்மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாமில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி, ஐடிபிஐ வங்கிகளின் மேலாளா்கள் பங்கேற்று, திருவாரூா் நகரில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கடன் வழங்கினா். முகாமில், சாலையோர வியாபாரிகள் பங்கேற்று, அடையாள அட்டை, தொழிலாளா் வாரிய அட்டை, ஆதாா் காா்டு நகல், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு நகல் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை வழங்கி, படிவங்களை பூா்த்தி செய்து, ரூ. 10 ஆயிரம் பெற்றுச் சென்றனா். இதில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எழிலரசன், உதவி திட்ட அலுவலா் சரவணன், நகராட்சி ஆணையா் (பொ) சண்முகம், நகராட்சி மேலாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.