திருவாரூா் மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,804 ஆக இருந்தது. புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,827 ஆக உயா்ந்தது. இதில், 10,614 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 104 போ் சிகிச்சையில் உள்ளனா்.