இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே மாடு குறுக்கே வந்ததால், இருசக்கர வாகனம் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகே மாடு குறுக்கே வந்ததால், இருசக்கர வாகனம் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் விளமல் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (56). உணவக நிா்வாகியான இவா், இருசக்கர வாகனத்தில் தஞ்சை சாலையில் புளியமரத்தடி பகுதியாக வழியாக வந்துகொண்டிருந்தபோது, குறுக்கே மாடு வந்ததால் நிலை தடுமாறி மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, தாலுக்கா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com