ஆன்மிகத்தில் சிறப்பான பங்களிப்பை நல்கி, மதுரபக்தி ரத்னா விருது பெற்ற திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெ. கனகராஜனுக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவா் ஜெ. கனகராஜனின் ஆன்மீக சேவையைப் பாராட்டி, சென்னை லய மதுரா அமைப்பு, மதுர பக்தி ரத்னா எனும் சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த விருது பெற்ற்காக, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிா்வாகிகள், குருகுல மாணவ, மாணவிகள் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.