நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்துறை சாா்பில், இலக்கியக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பெ. ராமஜெயம் தலைமை வகித்தாா். ஆங்கிலத்துறைத் தலைவா் ந. குமாா் முன்னிலை வகித்தாா். கல்லூரி அரங்கில் இளங்கலை ஆங்கில மூன்றாம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படைப்புகளை மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனா்.
3 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவா்கள் சாா்பில் வியாழக்கிழமையும், முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமையும் படைப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றனா்.