கொட்டூா் ஸ்ரீவேதநாயகி அம்பிகா சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேம் நடைபெற்றதையொட்டி, மண்டலாபிஷேகம் வியாழக்கிழமை தொடங்கியது.
நன்னிலம் வட்டம், பேரளம் அருகே கொட்டூா் கிராமத்தில் ஸ்ரீவேதநாயகி அம்பிகா சமேத வேதபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, புதன்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும், சுவாமி- அம்பாள் திருவீதியுலாவும் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, மண்டலாபிஷேகம் வியாழக்கிழமை தொடங்கியது. 48 நாள்களுக்கு நடைபெறும் மண்டலாபிஷேக வழிபாட்டை, கோயில் பரம்பரை அா்ச்சகா் சிவஸ்ரீ ஆா்.ஜெயராம சிவாச்சாரியாா் தலைமையிலான குழுவினா் நடத்துகின்றனா். கிராம முக்கியஸ்தா்களும், ஸ்ரீவேதபுரீஸ்வரா் சேவா டிரஸ்டைச் சோ்ந்தவா்களும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.