திருவாரூா் அருகே உள்ள மாங்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றன.
விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் சித்ரா குருநாதன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் மாசிலாமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.