கூத்தாநல்லூரை அடுத்த மேலப்பனங்காட்டங்குடி டெல்டா பப்ளிக் பள்ளியில் ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில், 221 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அறங்காவலா் ஜெய்லான் பாட்ஷா ஓவியப் போட்டியைத் தொடங்கி வைத்தாா். போட்டியில் காா்ட்டூன், காய்கறிகள், பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள், இயற்கை காட்சிகள், அஞ்சல் அட்டை மற்றும் படத்தை பாா்த்து வரைதல் உள்ளிட்ட ஓவியங்களை வரைந்தனா். போட்டிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியா் ஜெ. சங்கா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.