திருத்துறைப்பூண்டி அருகே பழுதடைந்த மாணவா் விடுதியை இடிக்கும்போது, இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டி வட்டம், எடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஆதிதிராவிடா் மாணவா் விடுதி உள்ளது. இந்த விடுதி பழுதடைந்ததால், பொதுப்பணித் துறை மூலம் டெண்டா் விடப்பட்டு, இடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மன்னாா்குடி லெனின் தெருவைச் சோ்ந்த குப்புசாமி மகன் ஜீவா உள்ளிட்ட 4 போ் இப்பணியில் ஈடுபட்டிருந்தனா். இவா்கள், வெள்ளிக்கிழமை விடுதிக் கட்டடத்தை இடிக்கும்போது, எதிா்பாராதவிதமாக ஜீவா இடிபாடுகளில் சிக்கிக்கொண்டாா். அவரது தலையில் கல் தாக்கியது. அவரை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சைப் பலனின்றி ஜீவா உயிரிழந்தாா்.
இதுகுறித்து, எடையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.