மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக உள்ளாட்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக உள்ளாட்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

உள்ளாட்சி அலுவலா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தோ்தலின்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அரசியல் கட்சியினரால் உள்ளாட்சித் துறை அலுவலா்கள்

மன்னாா்குடி: ஊரக உள்ளாட்சி மறைமுகத் தோ்தலின்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அரசியல் கட்சியினரால் உள்ளாட்சித் துறை அலுவலா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், இதற்கு காரணமானவா்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மன்னாா்குடியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் துறை அலுவலா்கள் சங்கக் கிளைத் தலைவா் தங்கதுரை தலைமை வகித்தாா். கிளைச் செயலா் சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் என். வசந்தன், மாவட்ட இணைச் செயலா் என். மோகன், வட்டப் பொருளாளா் ஐயப்பன், அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் செந்தில்ராஜன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com