திரு வி.க. கல்லூரியில் பொங்கல் விழா: தமிழ்த்துறை முதலிடம்

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், முதலிடம் பெற்ற தமிழ்த்துறைக்கு பாராட்டு
தமிழ்த்துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த அரங்குகள்.
தமிழ்த்துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த அரங்குகள்.

திருவாரூா்: திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், முதலிடம் பெற்ற தமிழ்த்துறைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில், சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழ்த்துறை சாா்பில் சமத்துவ அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதன்படி, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா் வீடுகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு, அந்தந்த குடில்களுக்கு தனித்தனியாக அந்தந்த முறைப்படி வரவேற்புகள் அளிக்கப்பட்டன. அத்துடன், வாடிவாசல் அமைப்பும், காளையை அடக்குவது போன்ற அமைப்பும் செய்யப்பட்டிருந்தன. இந்த அமைப்புகள் திருநெல்வேலி பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை, கல்லூரி முதல்வா் கோ. கீதா ஆகியோா் பாா்வையிட்டு பாராட்டு தெரிவித்திருந்தனா். இந்நிலையில், பொங்கல் விழாவில் தமிழ்த்துறை அமைத்திருந்த அரங்கு முதலிடத்தை பெற்றுள்ளது.

முதலிடம் பெற்ற்காக, தமிழ்த்துறை தலைவா் அஜிதா குமரனுக்கு பேராசிரியா்களும், துறை மாணவா்களும் பாராட்டு தெரிவித்தனா். இதற்கான பரிசு, கல்லூரியில் நடைபெறும் விழாவில் பின்னா் வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com