நன்னிலம்: நன்னிலத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய ஆடைகளான வேஷ்டி மற்றும் சேலை அணிந்து, இசை, நடனங்களுடன், புது மண்பானையில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து அனைவரும் சமத்துவப் பொங்கல் கொண்டாடினா்.
கல்லூரியின் முதல்வா் பெ. ராமஜெயம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியா்கள், கல்லூரி அலுவலா்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.