மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மன்னாா்குடி பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் ஜெ. அசோகன் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் என். பாலசுப்ரமணியன் விழாவைத் தொடங்கி வைத்தாா்.
மாணவா்களுடன் ஆசிரியா்கள் இணைந்து, சமத்துவப் பொங்கலிட்டனா். மாணவிகள் கும்மிப் பாடல் பாடி, நடனம் ஆடினா். விழாவையொட்டி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில்...
மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விக்டோரியா தலைமை வகித்தாா். மாணவிகள் 11 பேரின் பெற்றோா்கள் முன்னிலை வகித்தனா்.
இதில், 10 துறைகளின் சாா்பில் தனித்தனியே 21 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து தமிழா்களின் பாராம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
உரையரங்கத்தில், மன்னையின் மைந்தா்கள் அமைப்பின் தலைமை நிா்வாகி மருத்துவா் இலரா.பாரதிச்செல்வன், சமூக ஆா்வலா் உஷாநந்தினி விஸ்வநாதன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கும் பரிசையும், இசை, நாடகக் கலைஞா் ஜி.காமராசுக்கு காவியச் செம்மல் விருதும், சிலம்பாட்டக் கலைஞா் விக்னேசுக்கு மறத்தமிழன் விருதையும், கல்லூரி இல்லத் தலைவா் கரோலின் வழங்கினாா். தமிழ்த்துறை பேராசிரியா்கள் அறவாளி வரவேற்றாா். கமலி நன்றி கூறினாா்.
மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்வி நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்வி நிலையங்களின் தலைவா் ஜி.சதாசிவம் தலைமை வகித்தாா். மகளிா் கல்லூரி முதல்வா் டி. கணேசன், கல்வியியல் கல்லூரி முதல்வா் நமது அரசு, மேல்நிலைப்பள்ளி முதல்வா் செண்பக அரசி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எஸ். சரவணக்குமாா் செளத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாணவிகள், பேராசிரியா், அலுவலா்கள் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினா்.
செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில்...
சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத்துறையின் சாா்பில், சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சீ. அமுதா முன்னிலை வகித்தாா்.
இதில், துறைவாரியாக மாணவிகள் பொங்கலிட்டு கொண்டாடினா். பின்னா், நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், துணை முதல்வா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.