சமத்துவப் பொங்கல் விழா

திருவாரூா் அருகே எண்ணக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
எண்ணக்குடி பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா.
எண்ணக்குடி பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா.

திருவாரூா் அருகே எண்ணக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, சுரைக்காயூா் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரி செல்வராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியையொட்டி, புதுப்பானையில் பொங்கல் வைத்து, கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் கோ.பூங்குழலி, எண்ணக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் க. தியாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில்...

திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழா் பண்பாட்டை விளக்கும் விதமாக, கோலப் போட்டி நடத்தப்பட்டது. சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டு மாணவ- மாணவிகள் கும்மியடித்து நடனமாடி பொங்கலைக் கொண்டாடினா். மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கை பழைய சோறா, துரித உணவு வகையா எனும் தலைப்பில் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்ட சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கல்விக்குழுமத் தலைவா் எஸ். வெங்கடராஜலு, கல்லூரி முதல்வா் எம். சேதுராமன், துணை முதல்வா் அறிவழகன் மற்றும் துறை தலைவா்கள் பேராசிரியா்கள் மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com