திருவாரூரில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கான முதன்மைத் தோ்வு ஜனவரி 20- ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சீனாவின் ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பரில் நடைபெறும் சா்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக, மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கான முதன்மைத் தோ்வு நடைபெற உள்ளது. இதில், 6 துறைகளில் உள்ள 47 தொழிற்பிரிவுகளுக்கு ஜனவரி 20, 21 மற்றும் 22 ஆகிய நாள்களிலும், அத்தோ்வில் தோ்வு பெற்ற போட்டியாளா்களுக்கு மாவட்ட அளவில் திறன் போட்டிகள் ஜனவரி 23 முதல் 31- ஆம் தேதி வரையிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிக்கு விண்ணப்பித்தவா்களுக்கு போட்டி நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்து அஞ்சல் வழியாக தபால் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, சு.செந்தில்குமாா், உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், நாகப்பட்டினம், தொலைபேசி எண்: 04365 250126- என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.