நீடாமங்கலம் அருகே தந்தையைத் தாக்கியதாக மகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஒட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (65). இவருக்கும், இவரது மகன் ஜீவாவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில் ஜீவா தனது தந்தையை இரும்புக்கம்பியால் தாக்கினாராம். இதனால் காயமடைந்த தங்கவேல், நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா வழக்குப் பதிவு செய்து, ஜீவாவை கைது செய்தாா்.