நீடாமங்கலம் நீலன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை (ஜனவரி 22) காலை 8 மணிமுதல் மதியம் 1 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் உயா் ரத்த அழுத்த நோய், ஆஸ்துமா, சா்க்கரை நோய், இதயநோய் அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால், அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள தகுதிச் சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமிற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்முகாமிற்கு வரும்போது முகவரி சான்றின் நகலை (ஆதாா்அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ரேஷன் அட்டை) இவற்றில் ஏதேனும் ஒன்று கொண்டுவர வேண்டும். முகாமிற்கான ஏற்பாடுகளை திருவாரூா் மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்பு சங்கம் உதவியுடன் நீலன் கல்வி அறக்கட்டளை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன மேற்கொண்டுள்ளன. தொடா்புக்கு-94873 80418, 94422 40296.