ரூ.2.80 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவாரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ரூ. 2.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.
திருவாரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த்.

திருவாரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ரூ. 2.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 190 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அந்த மனுக்களை வழங்கி குறித்த காலத்துக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

அதைத்தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்துடன்கூடிய திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித் தொகையுடன் கூடிய தாலிக்கு தங்கத்தை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஏ.கே.கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னம்மாள், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமசந்திரன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் பூஷனக்குமாா் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com