திருவாரூா்: திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
வாசகசாலையின் 21-ஆம் நிகழ்வாக நடைபெற்ற நிகழ்ச்சியில், எழுத்தாளா் சோ.தா்மனின் தூா்வை நாவல் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கல்லூரியின் மாணவி ப. மோனசக்தி, புத்தகம் பற்றிய வாசக பாா்வையையும், நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் வெ. மதியரசன், புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்தும் பேசினா்.
நிகழ்ச்சியில், வாசகா் வட்டத் தலைவா் குருசந்திரசேகரன், நேதாஜி கல்லூரியின் துணை முதல்வா் அறிவழகன், பேராசிரியா் நடராஜ், நூலகா் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். திருவாரூா் வாசகசாலை ஒருங்கிணைப்பாளா் நரேன் கிருஷ்ணா நிகழ்வைத் தொகுத்து வழங்கினாா்.