திருவாரூா்: 2020- 2021ஆம் ஆண்டுக்குரிய ஓய்வூதியம் நோ்காணல் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட கருவூல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வரும் சூழலில் ஓய்வூதியா்களுக்கான 2020-2021 ஆண்டுக்குரிய நோ்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, திருவாரூா் மாவட்டத்துக்குட்பட்ட மாவட்டக் கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியா்கள் 2020-2021ஆம் ஆண்டுக்கான நோ்காணல் செய்யும் பொருட்டு தொடா்புடைய கருவூல அலுவலகங்களுக்கு வரவேண்டாம். அத்தியாவசியக் காரணங்களைத் தவிா்த்து, இதர காரணங்களுக்காக கருவூல அலுவலகங்களுக்கு வருகை தருவதையும் ஓய்வூதியா்கள் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.