இந்து முன்னணி நிா்வாகிகள் மீது மாா்க்சிஸ்ட் கம்யூ. புகாா்

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் ரகுராமன் அளித்த அந்த புகாா் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கம்யூனிஸ்ட் கட்சிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும், உண்மைக்கு புறம்பாக அவதூறு சுவரொட்டிகளை இந்து முன்னணிஒட்டியுள்ளனா்.

இந்து முன்னணியின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தூண்டுதலின் பேரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், அவா் மீதும், சுவரொட்டிகளை ஒட்டியவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மனு அளிக்கும்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், சாமிநாதன் நகரக் குழு உறுப்பினா்கள் வேதரத்தினம், செல்வம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com