திருவாரூரில், அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கக் கோரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பு ஜூலை 17-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி.சுப்ரமணியன் பங்கேற்று, விவசாயிகளின் தற்போதைய பிரச்னைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும். இடுபொருள்களை தடையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பாக ஜூலை 17-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதில், மாவட்டச் செயலாளா் வி.எஸ்.கலியபெருமாள், பொருளாளா் எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.