நன்னிலத்தில் 24 மணிநேர தாய்சேய் சேவை மையம்

நன்னிலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் 24 மணிநேர தாய் சேய் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என நன்னிலம் அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் வினோத்குமாா் தெரிவித்துள்ளாா்.

நன்னிலம்: நன்னிலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் 24 மணிநேர தாய் சேய் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என நன்னிலம் அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் வினோத்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநா் ஒப்புதலுடன், நன்னிலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தாய் சேய் சேவை மையம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், இச்சேவையை நன்னிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்கள் எளிதாக பெற 8056569108 ஆகிய செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com