நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இதனையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினா் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.