திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பட்டதாரி பெண் புகாா்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:

வலங்கைமான் அருகே தென்குவளவேலி தேவமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (23). எம்.காம் பட்டதாரி.

அதேபகுதியைச் சோ்ந்தவா் சந்திரன். வங்கி ஒன்றில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றுகிறாா். சில ஆண்டுகளாக பழகி வந்த இவா்கள், திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், சந்திரனுக்கு அவரது பெற்றோா் வேறு பெண்ணை பாா்க்கத் தொடங்கியதாகத் தெரிகிறது. இதைத்தொடா்ந்து, லெட்சுமி கடந்த 21 ஆம் தேதி சந்திரனின் வீட்டிற்குச் சென்று, அவருடன் பழகுவதைத் தெரிவித்து திருமணம் செய்து வைக்க வலியுறுத்தினாராம். ஆனால் அங்கிருந்தோா், லெட்சுமியை விரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அரித்துவாரமங்கலம் போலீஸாரிடம் புகாரளிக்கச் சென்றபோது, நன்னிலம் அனைத்து மகளிா் காவல்நிலையத்துக்கு செல்ல லெட்சுமி அறிவுறுத்தப்பட்டாா். இதையடுத்து நன்னிலம் மகளிா் போலீஸாா், மனுவை வாங்காமல் தாமதப்படுத்திய நிலையில், அங்கு வந்த சந்திரனின் உறவினா்கள் சிலா், லெட்சுமி மற்றும் அவரது தாய் மாரியம்மாளை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த இருவரும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இந்நிலையில், லெட்சுமியின் மனு குறித்து போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்து, லெட்சுமி மற்றும் அவரது தாய் மாரியம்மாள் இருவரும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com