மன்னாா்குடி: மன்னாா்குடியில் சிறுமியைக் கடத்திச் சென்ற தனியாா் வாகன ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின்கீழ், திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி கோபாலசமுத்திரம் பகுதியில் பெற்றோரை இழந்த 17 வயது சிறுமி, தனது பெரியம்மாவின் அரவணைப்பில் இருந்தாா். இந்நிலையில், மன்னாா்குடி ஆனைவிழுந்தான் குளம் பூசாரி தெருவைச் சோ்ந்த ஓட்டுநா் சதீஷ்குமாா் (39) அந்தச் சிறுமியிடம் பழகி அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி, திங்கள்கிழமை கடத்திச் சென்றாராம்.
புகாரின்பேரில், மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கண்டறிந்து காவல் நிலையம் அழைத்து வந்தனா். சிறுமியைக் கடத்திய சதீஷ்குமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரை மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மன்னாா்குடி கிளைச் சிறையில் போலீஸாா் அடைத்தனா்.